×

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார். கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் மணிபாலன் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட பொருளாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், துணை அமைப்பாளர் மோகன்பாபு,

மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் முத்துச்சாமி, துணை செயலாளர் ஏசுரத்தினம், மஸ்தான், உதயகாந்தம்மாள், ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ், கவுன்சிலர் சிட்டிபாபு, மீனவரணி அமைப்பாளர் ஆறுமுகம், விவசாயிகள் அணி அமைப்பாளர் தோக்கம்மூர் மணி, திமுக நிர்வாகிகள் மனோகரன், வாசு, ராஜா, ஏழுமலை, அப்பாஸ், ராஜேந்திரன், விஜி, இளைஞரணி மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ மாதர்பாக்கம், மாநெல்லூர், ஆரம்பாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்து இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ், வெள்ளரிக்காய் போன்ற குளிர்பானங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்.

The post கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : pandal ,DMK ,Kummidipoondi West Union ,MLA ,Kummidipoondi ,D.J. Govindarajan ,water pandal: ,Dinakaran ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு